கோவை: கோவையில் 18 வயது பூர்த்தியடையாத மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் 18 வயது பூர்த்தியடையாத மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருமலையம்பாளையம் ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் கனகராஜ் (21). அதேபோல, குட்டிகவுண்டன்பதி புதுகாலனியைச் சேர்ந்த வெங்கடாசலத்திற்கு 17 வயது மகள் உள்ளார். இவர், மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது, முதலே இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 27-ம் தேதி சந்தியா வீட்டை விட்டு வெளியே வந்து கனகராஜை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், தனது பேத்தியை காணவில்லை எனக் கூறி சிறுமியின் தாத்தா க.க. சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கனகராஜின் பெற்றோர்களை அழைத்த காவல் துறையினர் திருமணம் செய்து கொண்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளனர். இதனால், பெற்றோர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
திருமலையம்பாளையம் ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் கனகராஜ் (21). அதேபோல, குட்டிகவுண்டன்பதி புதுகாலனியைச் சேர்ந்த வெங்கடாசலத்திற்கு 17 வயது மகள் உள்ளார். இவர், மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது, முதலே இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 27-ம் தேதி சந்தியா வீட்டை விட்டு வெளியே வந்து கனகராஜை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், தனது பேத்தியை காணவில்லை எனக் கூறி சிறுமியின் தாத்தா க.க. சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கனகராஜின் பெற்றோர்களை அழைத்த காவல் துறையினர் திருமணம் செய்து கொண்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளனர். இதனால், பெற்றோர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.