நீதிமன்றத்திற்குள் புகுந்து கைது நடவடிக்கை: சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்

திருப்பூர்: திருப்பூரில் நீதிமன்றத்திற்குள் புகுந்து குற்றவாளியை கைது செய்த சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் நீதிமன்றத்திற்குள் புகுந்து குற்றவாளியை கைது செய்த சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி சிட்டிபாபு என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் என்பவர் திருப்பூர் நீதிமன்றத்திற்கு சரணடைய வந்தார். ஆனால், இது குறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் முனிஸ்வரன், சட்ட விதிகளை மீறி நீதிமன்றத்திற்குள் புகுந்து சந்தோஷை கைது செய்தார். 

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு திருப்பூர் வழக்கறிஞர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நீதிமன்ற பணிகளும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 

இது தொடர்பாக திருப்பூர் வழக்கறிஞர் சங்கத்தினர், ஆய்வாளர் முனிஸ்வரன் நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை விசாரித்த தலைமை நீதிபதி, சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனிஸ்வரன் செயலுக்கு அரசு வழக்கறிஞரை அழைத்து கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்ற கண்டனத்துக்குள்ளான ஆய்வாளர் முனிஸ்வரன் தெற்கு மண்டல காவல்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், உடனடியாக தெற்கு மண்டல காவல் துறையில் பணிக்கு சேரும்படி காவல் துறை தலைமையகத்தில் இருந்து ஆய்வாளர் முனிஸ்வரனுக்கு உத்தரவும் பிறபிக்கப்பட்டுள்ளது.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...