உதகையில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ரசாயன நீர் : மின் இணைப்பை துண்டித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

நீலகிரி : உதகையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீர் அணைகளில் கலந்து வருவது தெரிய வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

நீலகிரி : உதகையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீர் அணைகளில் கலந்து வருவது தெரிய வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 



உதகையை அடுத்த சாண்டிநள்ளா பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஜெனலட்டின் கேப்சிகம் மருந்துகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீர் காமராஜர் மற்றும் பைக்காரா அணைகளில் நேரடியாக கடும் துர்நாற்றத்துடன் கலந்து வருகிறது.

இதனால், தொழிற்சாலையை ஓட்டியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசிக்கும் மக்கள், ரசாயன கலந்த கழிவு நீர் செல்லும் கால்வாயில் இருந்து உற்பத்தியாகும் கொசுகளினால் ஏற்படும் நோய்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற கொடிய நொய்களுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டது. 

இந்த சூழலில், அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 16 கிராமங்களில் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் எருமை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த ரசாயன கலந்த தண்ணீரை அருந்தியதால் பல வளர்ப்பு எருமைகள் நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதாக பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.

தொடர்ந்து, இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சுத்திகரிக்கப்படாமல் அணைகளில் நேரடியாக ரசாயனம் கலந்த கழிவு நீர் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால், அந்த தொழிற்சாலை நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்தார். இதனையடுத்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே அணைகளில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், சித்தரிக்கப்பட்ட நீர் அணைகளில் கலக்கப்படாததால், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் இன்று அதிகாலை அந்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பைத் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தொழிற்சாலையில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 6 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...