டிராவல்ஸ் கார்களை திருடி அடமானம் வைத்தவரை போலீசில் ஒப்படைத்த உரிமையாளர்கள்

கோவை: கோவையில் வாடகைக்கு வாகனம் எடுத்துக் கொள்வதாக கூறி 10-க்கும் மேற்பட்ட கார்களை எடுத்துச் சென்று அடமானம் வைத்த கும்பலைச் சேர்ந்த நபரை டிராவல்ஸ் உரிமையாளர்கள் பிடித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கோவை: கோவையில் வாடகைக்கு வாகனம் எடுத்துக் கொள்வதாக கூறி 10-க்கும் மேற்பட்ட கார்களை எடுத்துச் சென்று அடமானம் வைத்த கும்பலைச் சேர்ந்த நபரை டிராவல்ஸ் உரிமையாளர்கள் பிடித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

குனியமுத்தூர் பகுதியை சார்ந்த பாலசந்தர் என்பவர் தனது டிராவல்ஸ் நண்பர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தான் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், தன்னிடம் சீலியூரை சேர்ந்த அஜீத் என்பவர் 6 கார்களை வாடகைக்கு எடுத்து ஏமாற்றியதாகவும், மேலும், தனது நண்பர்கள் சிலரிடமும் கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்று பல டிராவல்ஸ் நிறுவனங்களில் கார்களை எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளதாக வாடகை கார் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், அஜித் சொல்லியதாகக் கூறி கார்களை எடுத்துச் சென்ற சந்துரு என்பவரை பாதிக்கப்பட்டவர்கள் தேடிப் பிடித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 



மேலும், கார்களை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்து மோசடி செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...