தேர்தல் பிரச்சாரத்தின் போது அடிதடி: வானதி சீனிவாசன் உள்பட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை: கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.,வினருக்கும் அ.தி.மு.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடி தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

கோவை: கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.,வினருக்கும் அ.தி.மு.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடி தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பாக தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், ஆர்.ஜி. நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த அ.தி.மு.க., மண்டல் தலைவர் ஆதிநாராயணுடன் தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இது தொடர்பாக, கடந்த 2016 மே மாதம் ஆதிநாராயணன் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்தப் புகாரை அடுத்து வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் மீது வெரைட்டிஹால் சாலையில் அடிதடி வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக, வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, அவர்களிடம் வழக்கு சம்பந்தமான குற்றபத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகின்ற ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...