கோவை மாநகர காவல்துறை சார்பில் ரத்த தானம் முகாம்

கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் காவலர் பயிற்சிப்பள்ளியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தானம் முகாமில் ஏராளமான போலீசார் ரத்தக் கொடையளித்தனர்.

கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் காவலர் பயிற்சிப்பள்ளியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தானம் முகாமில் ஏராளமான போலீசார் ரத்தக் கொடையளித்தனர். 

தமிழக காவல்துறை சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ரத்ததானம் செய்துள்ளனர். இதன் ஒருபகுதியாக கோவை மாநகர காவல்துறை சார்பில் ரத்ததான முகாம், காவலர் மருத்துவமனை முகாமில் நடைபெற்றது. இந்த முகாமை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 



இந்த சிறப்பு ரத்த தானம் முகாமில், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் தர்மராஜ் (தலைமையிடம் பொறுப்பு), பெருமாள் (குற்றம்), சுஜித் குமார் (போக்குவரத்து) போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில், கோவை மாநகர ஆயுதப் படையைச் சேர்ந்த 50 காவலர்கள், கோவை காவலர் பயிற்சிப்பள்ளியின் பயிற்சி பெண் காவலர்கள் 50 பேர் உள்பட மொத்தம் 197 பேர் ரத்த தானம் செய்தனர். இந்த ரத்த தானம் முகாமில் காவல்துறையில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள் என பலர் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். அதேபோல, கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தார்.



இதேபோல, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல்துறை சார்பில் ரத்த தானம் முகாம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் உட்கோட்ட காவல்நிலையத்தை சேர்ந்த மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், கருமத்தம்பட்டி ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட காவலர்கள் ரத்த தானம் செய்தனர். இந்த இரத்தத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் அளிக்கப்பட்டதாகத் துணை கண்காணிப்பாளர் மணி தெரிவித்தார்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...