கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் காவலர் பயிற்சிப்பள்ளியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தானம் முகாமில் ஏராளமான போலீசார் ரத்தக் கொடையளித்தனர்.
கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் காவலர் பயிற்சிப்பள்ளியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தானம் முகாமில் ஏராளமான போலீசார் ரத்தக் கொடையளித்தனர்.
தமிழக காவல்துறை சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ரத்ததானம் செய்துள்ளனர். இதன் ஒருபகுதியாக கோவை மாநகர காவல்துறை சார்பில் ரத்ததான முகாம், காவலர் மருத்துவமனை முகாமில் நடைபெற்றது. இந்த முகாமை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த சிறப்பு ரத்த தானம் முகாமில், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் தர்மராஜ் (தலைமையிடம் பொறுப்பு), பெருமாள் (குற்றம்), சுஜித் குமார் (போக்குவரத்து) போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், கோவை மாநகர ஆயுதப் படையைச் சேர்ந்த 50 காவலர்கள், கோவை காவலர் பயிற்சிப்பள்ளியின் பயிற்சி பெண் காவலர்கள் 50 பேர் உள்பட மொத்தம் 197 பேர் ரத்த தானம் செய்தனர். இந்த ரத்த தானம் முகாமில் காவல்துறையில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள் என பலர் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். அதேபோல, கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தார்.

இதேபோல, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல்துறை சார்பில் ரத்த தானம் முகாம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் உட்கோட்ட காவல்நிலையத்தை சேர்ந்த மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், கருமத்தம்பட்டி ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட காவலர்கள் ரத்த தானம் செய்தனர். இந்த இரத்தத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் அளிக்கப்பட்டதாகத் துணை கண்காணிப்பாளர் மணி தெரிவித்தார்.

தமிழக காவல்துறை சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ரத்ததானம் செய்துள்ளனர். இதன் ஒருபகுதியாக கோவை மாநகர காவல்துறை சார்பில் ரத்ததான முகாம், காவலர் மருத்துவமனை முகாமில் நடைபெற்றது. இந்த முகாமை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த சிறப்பு ரத்த தானம் முகாமில், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் தர்மராஜ் (தலைமையிடம் பொறுப்பு), பெருமாள் (குற்றம்), சுஜித் குமார் (போக்குவரத்து) போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், கோவை மாநகர ஆயுதப் படையைச் சேர்ந்த 50 காவலர்கள், கோவை காவலர் பயிற்சிப்பள்ளியின் பயிற்சி பெண் காவலர்கள் 50 பேர் உள்பட மொத்தம் 197 பேர் ரத்த தானம் செய்தனர். இந்த ரத்த தானம் முகாமில் காவல்துறையில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள் என பலர் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். அதேபோல, கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தார்.

இதேபோல, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல்துறை சார்பில் ரத்த தானம் முகாம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் உட்கோட்ட காவல்நிலையத்தை சேர்ந்த மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், கருமத்தம்பட்டி ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட காவலர்கள் ரத்த தானம் செய்தனர். இந்த இரத்தத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் அளிக்கப்பட்டதாகத் துணை கண்காணிப்பாளர் மணி தெரிவித்தார்.
