ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகப் பேச இதுநேரமல்ல..! ஜக்கிவாசுதேவிற்கு நடிகர் சித்தார்த் பதில்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கிவாசுதேவிற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கிவாசுதேவிற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களில் 11 பேர் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பலர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கிவாசுதேவ், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது :- காப்பரை உருவாக்குவதில் நான் கைதேர்ந்தவன் அல்ல. ஆனால், இந்தியாவில் காப்பர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் நமது நாட்டில் இதனை தயாரிப்பதில்லை. சீனாவில் இருந்தே இறக்குமதி செய்கிறோம். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல், சுற்றுச்சூழல் மாசுபடாதவாறு, சட்டவிதிகளுக்குட்பட்டு ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகப் பெரிய தொழில்களை அழிப்பது பொருளாதார தற்கொலையாகும், இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். 

ஜக்கிவாசுதேவின் இந்தக் கருத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சித்தார்த் தனது பங்கிற்கு அவரது கருத்திற்கு பதிலளித்துள்ளார். 



டுவிட்டரில் நடிகர் சித்தார்த் விடுத்துள்ள பதிவில், 'முதலமைச்சர் அலுவலகர் ஒரு வெட்கக்கேடு. பிரதமர் அலுவலகம் யோகாவைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசுவதில்லை. காப்பர் உருக்குவதில் பலன்களைப் பற்றி பேச இது சிறந்த நேரம் இல்லை சத்குரு. மக்கள் போலீசாரால் கொல்லப்படுகின்றனர். கொலை பற்றி பேசுங்கள்,' எனக் கூறியுள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...