கோவை : பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை குற்றால அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்கு 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை : பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை குற்றால அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்கு 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. மேலும், சிறுவாணி நீர்பிடிப்புப் பகுதிகளில் தற்போதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய ஒன்றாகத் திகழும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட நாட்களில் பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
இதனிடையே, கோவை குற்றால அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் நுழைய குளிக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை குற்றால அருவிக்கான தடை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.