திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மனோகரன் தொடங்கி வைத்தார். இதில், மாநகர எல்லைக்குட்பட்ட காவலர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்வில் திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் உமா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.