24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகராட்சியிடம் மார்க்சிஸ்ட் மனு

கோவை: மாநகராட்சிக்கு 24 மணிநேர குடிநீர் வழங்குவது தொடர்பான பன்னாட்டு நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை: மாநகராட்சிக்கு 24 மணிநேர குடிநீர் வழங்குவது தொடர்பான பன்னாட்டு நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.



கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை 'சூயஸ்' என்ற பிரெஞ்சு நாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்யக்கோரி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்., நடராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி., கருணாகரன், மாவட்ட செயலாளர் வி. ராமமூர்த்தி மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



அப்போது, மக்களின் கருத்துக்களை கேட்காமல் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு ரகசியமாக வழங்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதல் இல்லாமல் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...