கோவை: மாநகராட்சிக்கு 24 மணிநேர குடிநீர் வழங்குவது தொடர்பான பன்னாட்டு நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: மாநகராட்சிக்கு 24 மணிநேர குடிநீர் வழங்குவது தொடர்பான பன்னாட்டு நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை 'சூயஸ்' என்ற பிரெஞ்சு நாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்யக்கோரி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்., நடராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி., கருணாகரன், மாவட்ட செயலாளர் வி. ராமமூர்த்தி மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அப்போது, மக்களின் கருத்துக்களை கேட்காமல் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு ரகசியமாக வழங்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதல் இல்லாமல் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை 'சூயஸ்' என்ற பிரெஞ்சு நாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்யக்கோரி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்., நடராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி., கருணாகரன், மாவட்ட செயலாளர் வி. ராமமூர்த்தி மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அப்போது, மக்களின் கருத்துக்களை கேட்காமல் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு ரகசியமாக வழங்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதல் இல்லாமல் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.