கோவை விமான நிலையத்திற்குள் யானை சிலையை கொண்டு செல்வதில் சிக்கல்

கோவை: கோவை விமான நிலையத்தில் நிறுவப்பட இருந்த யானை சிலை அளவில் பெரியதாக இருப்பதால், விமான நிலையத்திற்குள் எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை விமான நிலையத்தில் நிறுவப்பட இருந்த யானை சிலை அளவில் பெரியதாக இருப்பதால், விமான நிலையத்திற்குள் எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 



ஃபைபரால் தயாரிக்கப்பட்ட இரண்டு யானைகளை கோவை விமான நிலையத்திற்குள் நிறுவப்படுவதாக கடந்த மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுற்றுலா வருபவர்களுக்கும், விமான நிலைய பயணிகளின் பார்வைக்கும் படும் வகையில் அந்த சிலைகளை நிறுவ விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது.



அவ்வாறு வந்த யானை சிலை அளவில் பெரியதாக இருந்ததால், விமான நிலைய முகப்பு தடுப்பினை கடந்து செல்ல முடியவில்லை. 



இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ரூ.58 லட்சம் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. யானை மட்டுமல்லாது, நீலகிரி வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள், காங்கேயம் காளைகள், தஞ்சாவூர் பொம்மை உள்ளிட்ட சிலைகள் வைக்கப்படுகின்றன. அதோடு, நீலகிரி மாவட்டத்தின் தொடர் இன மக்களின் வாழ்க்கை முறையை காட்டும் பொருட்கள் இங்கு வைக்கப்படுகின்றன. 



தற்போது இந்த பெரிய யானையின் உருவத்தை விமான நிலைய வளாகத்திற்குள் கொண்டு செல்ல ஆலோசித்து வருகிறோம்." என்றனர். 

தற்போது விமான நிலையம் அருகே வைக்கப்பட்டிருக்கும் அந்த யானை சிலை, நீண்ட நாட்களுக்கு அங்கேயே வைக்கப்பட்டு சேதமடைந்துவிடாமல் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதும், உடனடியாக அதனை நிலையத்திற்குள் கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...