கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த இவர், தனியாக துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று காலை காந்திபுரம் நூறடி சாலையில் 9-வது வீதியில் மாணிக்கவாசகம் என்ற இந்தியன் வங்கி மேலாளரின் வீட்டில் துப்புரவு பணிக்காக மகேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் சென்றனர். அப்போது கழிவு நீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்தார்.

இதையடுத்து, மகேந்திரனின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.மாநகராட்சி பணியாளர்களுக்கு பதிலாக பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ததே உயிரிழப்பிற்கு காரணமெனவும், இப்பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
குறைவான தொகைக்கு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய தனியார் துப்புரவு பணியாளர்களை ஈடுபடுத்தப்படுவதாகவும், இதனை தவிர்க்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான, செய்திகளுக்கு கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யவும்: http://simpli-city.in/theatre-