இனி கிளை மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுத்தால் கோவை அரசு மருத்துவமனையிலேயே நகல் வாங்கலாம்

கோவை: கிளை மருத்துவமனைகளில் எடுக்கப்படும் சி.டி ஸ்கேன் மற்றும் அதன் விளக்க அறிக்கையை கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் வகையில் டெலி ரேடியாலஜி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கோவை: கிளை மருத்துவமனைகளில் எடுக்கப்படும் சி.டி ஸ்கேன் மற்றும் அதன் விளக்க அறிக்கையை கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் வகையில் டெலி ரேடியாலஜி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்ற ஸ்கேன்கள் விபத்து, மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஆகிய பல்வேறு பிரச்சினைகளுக்காக, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோருக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் வசதி உள்ளது.



அதேபோல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, உதகை அரசு மருத்துவமனை, திருப்பூர் அரசு மருத்துவமனை என அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் மற்றும் சில தாலுகாவில் உள்ள மருத்துவமனைகளிலும் சி.டி ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ளது.

ஆனால், எடுத்த சி.டி ஸ்கேன் அறிக்கையை தயாரிக்கவும், அதுபற்றிய விளக்கத்தை கூறவும் தற்போதைய நிலையில் அதற்கான நிபுணர்கள் இல்லாமல் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் சி.டி ஸ்கேன் எந்த இடத்தில் எடுத்தாலும், அதற்கான அறிக்கையை பெற காலதாமதம் ஆகிறது. 

அதேபோல், சி.டி ஸ்கேன் அறிக்கை கிடைக்க காலதாமதம் ஆவதால் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், உரிய சிகிச்சையை உரிய நேரத்தில் எடுக்கத் தவறுவதை சரி செய்யும் வகையில் தற்போது கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெலி ரேடியாலஜி என்ற ஸ்கீம் உருவாக்கப்பட உள்ளது. 

உதாரணத்திற்கு, பொள்ளாச்சியில் உள்ள மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் எடுத்தால் அதன் நகல் விபரம் உடனடியாக கோவையில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் தலைமை மருத்துவமனையில் உள்ள சி.டி ஸ்கேனை பரிசோதிக்கும் நிபுணர்கள் கொண்டு, அந்த நகல் ஆராயப்பட்டு பின்பு ஸ்கேன் பரிசோதனையின் அறிக்கை தயாரித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது தான் இந்த டெலி ரேடியாலஜி திட்டத்தின் நோக்கமாகும். 

இந்த திட்டத்தின் மூலம், ஆள்பற்றாக்குறையை சமாளிப்பதுடன், ஒருவர் விரைவில் தன்னுடைய பாதிப்புகள் பற்றி அறிந்துகொள்ளவும், அது தொடர்பான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவும் இந்த திட்டம் கைகொடுக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டத்தை உடனடியாக செயல் வடிவத்திற்கு கொண்டு வர, பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் 24 மருத்துவர்களுக்கு திட்டம் தொடர்பான மென்பொருள் மற்றும் கணினி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 60 நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...