சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி மீது போலீசார் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி மீது போலீசார் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, சென்னை வடபழனியில் கடந்த ஜனவரி மாதம் இயக்குநர் அமீரின் படவிழா ஒன்றில் வளர்மதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மாநில அரசுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி வளர்மதி மீது கலவரத்தைத் தூண்டியதாக போலீசார் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். எனவே, அவரைக் கைது செய்வதற்காக சென்னை போலீசார், சேலம் மகளிர் சிறைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவரைக் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு நெடுவாசல் திட்டத்தை எதிர்த்து பேருந்துகளில் துண்டு பிரசாரம் விநியோகம் செய்ததற்காக வளர்மதி கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், உயர்நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, சென்னை வடபழனியில் கடந்த ஜனவரி மாதம் இயக்குநர் அமீரின் படவிழா ஒன்றில் வளர்மதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மாநில அரசுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி வளர்மதி மீது கலவரத்தைத் தூண்டியதாக போலீசார் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். எனவே, அவரைக் கைது செய்வதற்காக சென்னை போலீசார், சேலம் மகளிர் சிறைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவரைக் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு நெடுவாசல் திட்டத்தை எதிர்த்து பேருந்துகளில் துண்டு பிரசாரம் விநியோகம் செய்ததற்காக வளர்மதி கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், உயர்நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.