எஞ்சினியரிங் தரவரிசைப் பட்டியல் - கோவைக்கு பெருமை சேர்த்த மாணவியின் பேட்டி

கோவை: எஞ்சினியரிங் தரவரிசைப் பட்டியலில் தமிழக அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி. இவர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து நமது கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.


கோவை: எஞ்சினியரிங் தரவரிசைப் பட்டியலில் தமிழக அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி. இவர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து நமது கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.



தனது படிப்பு, எதிர்காலத் திட்டம் குறித்து கீர்த்தனா சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் கோவை மாவட்டம் சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர். எனது தந்தை வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அம்மா பாலக்காட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இதன் காரணமாக, நான் பாலக்காட்டில் உள்ள பி.எஸ்.எஸ். குருகுலம் பள்ளியிலேயே படித்து முடித்தேன். பிளஸ் 2 பொதுத்தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்றேன். பிறகு எஞ்சினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தேன். அதே நேரத்தில் எனக்கு டெல்லியில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் கல்லூரியில் வேதியியல் துறையில் இடம் கிடைத்தது. தற்போது அங்கு தான் படித்து வருகிறேன். அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்? என்பதை இன்னும் முடிவெடுக்கவில்லை.

நான் இந்த மதிப்பெண் பெற முழு காரணம் எனது பள்ளி ஆசிரியர்கள் தான். தினமும் அங்கு சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு படித்த காரணத்தால் தான் இந்த மதிப்பெண் பெற முடிந்தது. அடுத்து வரும் மாணவர்கள் சிரமப்பட்டு படிக்காமல், 'ஸ்மார்ட்'ஆக படித்தால் சுலபமாக இந்த மதிப்பெண் பெற முடியும்.

என்று கூறினார் கீர்த்தனா ரவி.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...