கோவை: உலக அமைதியை வலியுறுத்தி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவையில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொள்கிறார்.
கோவை: உலக அமைதியை வலியுறுத்தி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவையில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொள்கிறார்.
சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மதன் (26). தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இரு சக்கர வாகன பிரியரான இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அடிக்கடி பல்வேறு நீண்ட பயணங்கள் மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில், உலக அமைதியை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காஷ்மீர் வரை உலக சமாதானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார். இந்த பயணத்தில் காஷ்மீர் லடாக் பகுதியில் உள்ள கார்துங்லா இந்தியாவின் அபாய பகுதி 400 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக சென்று தேசியக் கொடியை நடவுள்ளார்.
கோவையில் இருந்து பெங்களூரு, ஹதராபாத், நாக்பூர், குவாலியர், ஆக்ரா, டெல்லி, மனாலி, ரோத்தாங் பாஸ், லடாக், கார்துங்லா ஆகிய இடங்களுக்குச் சென்று பின்னர், அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கோவை வருகிறார்.
மொத்தம் 22 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் மதன், இது குறித்து கூறுகையில், "ஒரு நாளைக்கு 500 கி.மீ வரை பயணம் செய்ய உள்ளேன். மேலும், 8000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய உள்ளேன். முதலில் பைக் ரேஸ் வீரராகவும், ஸ்டண்ட் வீரராகவும் வர ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் அனுமதிக்காததால், திருமணத்தை தொடர்ந்து நீண்ட தூர பயணங்களை குடும்பத்தினர் சம்மதத்தோடு செய்து மேற்கொண்டு வருகிறேன். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் மித்ரன் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர்.
சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மதன் (26). தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இரு சக்கர வாகன பிரியரான இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அடிக்கடி பல்வேறு நீண்ட பயணங்கள் மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில், உலக அமைதியை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காஷ்மீர் வரை உலக சமாதானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார். இந்த பயணத்தில் காஷ்மீர் லடாக் பகுதியில் உள்ள கார்துங்லா இந்தியாவின் அபாய பகுதி 400 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக சென்று தேசியக் கொடியை நடவுள்ளார்.
கோவையில் இருந்து பெங்களூரு, ஹதராபாத், நாக்பூர், குவாலியர், ஆக்ரா, டெல்லி, மனாலி, ரோத்தாங் பாஸ், லடாக், கார்துங்லா ஆகிய இடங்களுக்குச் சென்று பின்னர், அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கோவை வருகிறார்.
மொத்தம் 22 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் மதன், இது குறித்து கூறுகையில், "ஒரு நாளைக்கு 500 கி.மீ வரை பயணம் செய்ய உள்ளேன். மேலும், 8000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய உள்ளேன். முதலில் பைக் ரேஸ் வீரராகவும், ஸ்டண்ட் வீரராகவும் வர ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் அனுமதிக்காததால், திருமணத்தை தொடர்ந்து நீண்ட தூர பயணங்களை குடும்பத்தினர் சம்மதத்தோடு செய்து மேற்கொண்டு வருகிறேன். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் மித்ரன் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர்.