சாரைப்பாம்பை வறுத்து உண்பதாக பேஸ்புக் பதிவு: வன ஆர்வலர்கள் கடும் கண்டனம்

கோவை: விவசாய நிலத்தில் இருந்த சாரைப்பாம்பு ஒன்றை கொன்று உண்டதாக ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வான உயிரின ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: விவசாய நிலத்தில் இருந்த சாரைப்பாம்பு ஒன்றை கொன்று உண்டதாக ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வான உயிரின ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் சுப்ரமணியம். இவர் சாரைப்பாம்பு ஒன்றை கொன்று அதனை கையில் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், அதனை வறுத்து உண்ணவிருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.



இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சிராஜூதீன் கூறுகையில், "வன உயிரினங்களை வதைப்பது சட்டப்படி தவறு. கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் அருகே பறவைகளை வேட்டையாடி நான்கு பேர், அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்.

இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் புகார்களை தெரிவிக்கவே அந்த நால்வரும் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் தற்போது மற்றொருவர் சாரைப்பாம்பை கொன்று உண்பதாகப் பதிவு செய்துள்ளார்.

உழவனுக்கு நண்பனாக விளங்கும் சாரைப்பாம்பை விவசாய நிலத்தில் வைத்தே கொன்று இருப்பது வேதனை அளிக்கிறது. விசத்தன்மை இல்லாத சாரைப்பாம்பானது, விவசாய நிலத்தில் உள்ள எலி போன்ற உயிரினங்களை உண்டு, பயிர்களை சேதமடையாமல் பாதுகாக்கும் நண்பன்.



எனவே, இந்த செயலில் ஈடுபட்ட நபர் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...