ராமதாஸ் குறித்து விமர்சனம்: தமிழிசையை கண்டித்து கோவையில் பா.மா.கவினர் ஆர்ப்பாட்டம்

கோவை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் எம்.பி., அன்புமணி ராமதாஸ் குறித்து பற்றி தவறாக பேசியதாக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசையை கண்டித்து கோவையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் எம்.பி., அன்புமணி ராமதாஸ் குறித்து பற்றி தவறாக பேசியதாக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசையை கண்டித்து கோவையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தலைவருமான ராமதாசின் சமுகநீதி மற்றும் இடஒதுக்கீடு போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் மருத்துவர் அன்புமணி ராமதாசை கொச்சைப்படுத்தி கருத்துக்களை பதிவிட்ட கூறி பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பா.ம.க., மற்றும் கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும், போராட்டங்களை கொச்சைப்படுத்திய தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டங்கள் தீவிரமாகும் என்றும் எச்சரித்தனர். 

இப்போராட்டத்தின் போது ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையினர் மறுத்ததையடுத்து காவல்துறையினருடன் பா.ம.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒலிபெருக்கியை பயன்படுத்த காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் ஒலிபெருக்கி பயன்படுத்தாமல் போராட்டம் நடத்தப்பட்டது.



இதே போல், மேட்டுப்பாளையத்தில் பா.ம.க., சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு அக்கட்சியின் மாநில அமைப்பு துணை செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழிசைக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...