கோவை : 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
கோவை : 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இறுதியாக கோவையில் நடைபெற்ற மாவட்ட தி.மு.க., மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறியதாவது :- மக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவே 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்த திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல. அது அ.தி.மு.க.,வினர் தங்களை வளைமைபடுத்தி கொள்வதற்காகப் போடப்பட்ட திட்டமாகும்.
தமிழகத்தில் எந்த திட்டம் குறித்து விமர்சித்தாலும் கைது நடவடிக்கை என்பது எம்ர்ஜென்சியை காட்டிலும் மோசமான நிலையில் தமிழகம் இருப்பதைக் காட்டுகிறது. பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், அது குறித்து அரசியல் கட்சிகள் மட்டுமே பேசி வருகின்றனர். பெண்கள் வாழவே தகுதி இல்லாத நாடாக இந்தியா உருவாகி வருவது வேதனையளிக்கிறது.
வளர்ச்சித் திட்டங்களை ஒருபோதும் தி.மு.க., எதிர்ப்பதில்லை. ஆனால், மக்களின் கருத்துக்களை கேட்காமல் 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 8 வழி பசுமை வழிச்சாலை திட்டம் மக்களுக்கு எதிரான திட்டமாக இருப்பதால் தான் தி.மு.க., அதனை எதிர்க்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இறுதியாக கோவையில் நடைபெற்ற மாவட்ட தி.மு.க., மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறியதாவது :- மக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவே 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்த திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல. அது அ.தி.மு.க.,வினர் தங்களை வளைமைபடுத்தி கொள்வதற்காகப் போடப்பட்ட திட்டமாகும்.
தமிழகத்தில் எந்த திட்டம் குறித்து விமர்சித்தாலும் கைது நடவடிக்கை என்பது எம்ர்ஜென்சியை காட்டிலும் மோசமான நிலையில் தமிழகம் இருப்பதைக் காட்டுகிறது. பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், அது குறித்து அரசியல் கட்சிகள் மட்டுமே பேசி வருகின்றனர். பெண்கள் வாழவே தகுதி இல்லாத நாடாக இந்தியா உருவாகி வருவது வேதனையளிக்கிறது.
வளர்ச்சித் திட்டங்களை ஒருபோதும் தி.மு.க., எதிர்ப்பதில்லை. ஆனால், மக்களின் கருத்துக்களை கேட்காமல் 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 8 வழி பசுமை வழிச்சாலை திட்டம் மக்களுக்கு எதிரான திட்டமாக இருப்பதால் தான் தி.மு.க., அதனை எதிர்க்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.