24 மணிநேரக் குடிநீர் விநியோகத் திட்டம் மக்களுக்கான திட்டமல்ல : கோவையில் எம்.பி. கனிமொழி விமர்சனம்

கோவை : 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

கோவை : 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இறுதியாக கோவையில் நடைபெற்ற மாவட்ட தி.மு.க., மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.



முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறியதாவது :- மக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவே 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்த திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல. அது அ.தி.மு.க.,வினர் தங்களை வளைமைபடுத்தி கொள்வதற்காகப் போடப்பட்ட திட்டமாகும். 

தமிழகத்தில் எந்த திட்டம் குறித்து விமர்சித்தாலும் கைது நடவடிக்கை என்பது எம்ர்ஜென்சியை காட்டிலும் மோசமான நிலையில் தமிழகம் இருப்பதைக் காட்டுகிறது. பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், அது குறித்து அரசியல் கட்சிகள் மட்டுமே பேசி வருகின்றனர். பெண்கள் வாழவே தகுதி இல்லாத நாடாக இந்தியா உருவாகி வருவது வேதனையளிக்கிறது. 

வளர்ச்சித் திட்டங்களை ஒருபோதும் தி.மு.க., எதிர்ப்பதில்லை. ஆனால், மக்களின் கருத்துக்களை கேட்காமல் 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 8 வழி பசுமை வழிச்சாலை திட்டம் மக்களுக்கு எதிரான திட்டமாக இருப்பதால் தான் தி.மு.க., அதனை எதிர்க்கிறது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...