லட்சுமி மில்ஸ் சிக்னலில் காத்துக்கிடந்த ஆம்புலன்ஸ் : போக்குவரத்தை சீர்ப்படுத்தாத போலீசார்

கோவை: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தவறிய காவல்துறையினரால் கோவை லட்சுமி மில்ஸ் சிக்னலில் நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கோவை: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தவறிய காவல்துறையினரால் கோவை லட்சுமி மில்ஸ் சிக்னலில் நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடம் கொடுக்க வேண்டிய கடமை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் உள்ளது. அதனினும் ஒருபடி மேலாக, ஆம்புலன்ஸ் 'சைரன்' சத்தம் கேட்டவுடன் துரிதமாக செயல்பட்டு, ஆம்புலன்ஸ் செல்வதற்காக பொறுப்பும், கடமையும் போக்குவரத்து போலீசாருக்கு உள்ளது. 



இந்த சூழலில், இன்று லட்சுமி மில்ஸ் சிக்னலில் போக்குவரத்து காவலர் பணியில் இருந்தும், அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தித் தர தவறியுள்ளார். 

இதன் காரணமாக அந்த ஆம்புலன்ஸ் சிக்னலிலேயே சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்குகிறது. ஒருவரை காப்பாற்ற முகாந்திரம் உள்ள நேரத்தினை மருத்துவர்கள் 'கோல்டன் ஹவர்ஸ்' என்று அழைப்பதுண்டு. அப்படியான பொன்னான நேரத்தை ஆம்புலன்சுகள் இப்படி சிக்னல்களிலேயே வீணாக்குகின்றன.

இதை காவல்துறை அதிகாரிகள் கருத்தில் கொண்டு, முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...