நீலகிரி: மாநில பெண்கள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று உதகையில் நடைபெற்றது.
நீலகிரி: மாநில பெண்கள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று உதகையில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் மாநில பெண்கள் பாதுகாப்பு ஆணையம், தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் கோவை, நீலகிரி தொண்டு நிறுவனங்கள் சார்பில் பெண்கள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு குறித்த இரண்டு நாட்கள் நடைபெறும் கருத்தரங்கு நடைபெற்றது.
இதனை பெண்கள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சியர், "இது வரை நான் பெண் என்று தனியாக பிரித்துப் பார்க்காமல் பல கட்டுப்பாடுகளை விதித்து என்னை என் குடும்பத்தார் வளர்த்ததில்லை. அதுபோல அனைவரும் பெண்களை சுதந்திரமாக செயல்படும் வகையில் அனைத்து பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை வளர்க்க வேண்டும்." என்று அவர் கூறினார்.
இந்த கருத்தரங்கில் காவல்துறை, வழக்கறிஞர்கள், அரசுத்துறை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.