கோவை: மரக்கடை பகுதியில் உள்ள ஹார்டுவேர் கடை ஒன்றின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை: மரக்கடை பகுதியில் உள்ள ஹார்டுவேர் கடை ஒன்றின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை மரக்கடை பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேவாராம் என்பவர் மகாதேவ் ஹார்டுவேர் என்ற பெயரில் கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு கடையின் உரிமையாளர் வழக்கம் போல கடையை பூட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று கடையை திறக்க வந்த கேவாராம் கடை உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், சம்பவ இடத்திற்குச் சென்ற குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் கொள்ளையர்கள் கடையின் பின் புற கதவை உடைத்து கடைக்குள் நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அந்த கொள்ளையர்கள் கடைக்குள் இருந்த சி.சி.டி.வி., காமிராவையும் தூக்கிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மரக்கடை பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேவாராம் என்பவர் மகாதேவ் ஹார்டுவேர் என்ற பெயரில் கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு கடையின் உரிமையாளர் வழக்கம் போல கடையை பூட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று கடையை திறக்க வந்த கேவாராம் கடை உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், சம்பவ இடத்திற்குச் சென்ற குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் கொள்ளையர்கள் கடையின் பின் புற கதவை உடைத்து கடைக்குள் நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அந்த கொள்ளையர்கள் கடைக்குள் இருந்த சி.சி.டி.வி., காமிராவையும் தூக்கிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.