கோவை: மாநகருக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதி கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை: மாநகருக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதி கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 60 வார்டுகளுக்கு குடிநீரை 24 மணி நேரமும் வழங்க மாநகராட்சி சார்பில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ரூ. 3,150 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதனைக் கண்டித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சமூக நீதி கட்சி சார்பில் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக செஞ்சிலுவை சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர் குடிநீர் வழங்கும் திட்டம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து பேரணியாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 60 வார்டுகளுக்கு குடிநீரை 24 மணி நேரமும் வழங்க மாநகராட்சி சார்பில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ரூ. 3,150 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதனைக் கண்டித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சமூக நீதி கட்சி சார்பில் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக செஞ்சிலுவை சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர் குடிநீர் வழங்கும் திட்டம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து பேரணியாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.