கோவையில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: சமூக நீதி கட்சியை சேர்ந்தவர்கள் கைது

கோவை: மாநகருக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதி கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை: மாநகருக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதி கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 60 வார்டுகளுக்கு குடிநீரை 24 மணி நேரமும் வழங்க மாநகராட்சி சார்பில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ரூ. 3,150 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதனைக் கண்டித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சமூக நீதி கட்சி சார்பில் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.

முன்னதாக செஞ்சிலுவை சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர் குடிநீர் வழங்கும் திட்டம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து பேரணியாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...