திருப்பூர்: திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் டேங்கர் லாரி மோதியதில் ஆம்புலன்சில் பயணம் நோயாளி மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் டேங்கர் லாரி மோதியதில் ஆம்புலன்சில் பயணம் நோயாளி மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிராஜ், மூச்சு கோளாறு இருந்ததன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக நேற்று இரவு தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்சில் தனது மனைவி பிரியா மற்றும் உறவினர்களோடு ஒட்டன்சத்திரம் செல்ல தாராபுரம் சாலை வழியாக சென்றுள்ளனர்.

அப்போது கோவையிலிருந்து கரூர் செல்ல வந்த டேங்கர் லாரி அவிநாசிபாளைம் அருகே சாலையை கடக்கும்போது வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஆம்புலன்சில் பயணித்த ஜோதிராஜ் (55), பிரியா (50), ஞானசெல்வி (45) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிராஜ், மூச்சு கோளாறு இருந்ததன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக நேற்று இரவு தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்சில் தனது மனைவி பிரியா மற்றும் உறவினர்களோடு ஒட்டன்சத்திரம் செல்ல தாராபுரம் சாலை வழியாக சென்றுள்ளனர்.

அப்போது கோவையிலிருந்து கரூர் செல்ல வந்த டேங்கர் லாரி அவிநாசிபாளைம் அருகே சாலையை கடக்கும்போது வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஆம்புலன்சில் பயணித்த ஜோதிராஜ் (55), பிரியா (50), ஞானசெல்வி (45) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.