திருப்பூரில் ஆம்புலன்ஸ்-டேங்கர் லாரி மோதி விபத்து: நோயாளி உட்பட மூவர் பலி

திருப்பூர்: திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் டேங்கர் லாரி மோதியதில் ஆம்புலன்சில் பயணம் நோயாளி மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் டேங்கர் லாரி மோதியதில் ஆம்புலன்சில் பயணம் நோயாளி மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிராஜ், மூச்சு கோளாறு இருந்ததன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக நேற்று இரவு தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்சில் தனது மனைவி பிரியா மற்றும் உறவினர்களோடு ஒட்டன்சத்திரம் செல்ல தாராபுரம் சாலை வழியாக சென்றுள்ளனர்.



அப்போது கோவையிலிருந்து கரூர் செல்ல வந்த டேங்கர் லாரி அவிநாசிபாளைம் அருகே சாலையை கடக்கும்போது வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஆம்புலன்சில் பயணித்த ஜோதிராஜ் (55), பிரியா (50), ஞானசெல்வி (45) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...