பரளிக்காடு சுற்றுலா மீண்டும் தொடக்கம்; பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பரளிக்காடு சுற்றுலா மீண்டும் தொடங்கியது. அதே போல், வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது.


கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பரளிக்காடு சுற்றுலா மீண்டும் தொடங்கியது. அதே போல், வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில், இம்மாத தொடக்கம் முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக அணை நிரம்பி பவானியாற்றில் நீர் திறக்கப்பட்டது.

அந்த ஆற்றில் ஏற்பட்ட வெளியேற்றப்பட்ட நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள பரளிக்காடு என்ற இடத்தில் வனத்துறை சார்பில் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக கடந்த 10-ம் தேதி வனத்துறை அறிவித்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக மழையின் அளவு குறைந்து அணையின் நீர்மட்டமும் அதன் நீர்வரத்தும் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டிருந்த சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.



குற்றாலம்







கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மீண்டும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய:-

http://coimbatorewilderness.com/Booking-Baralikadu.aspx

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...