கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பரளிக்காடு சுற்றுலா மீண்டும் தொடங்கியது. அதே போல், வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது.
கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பரளிக்காடு சுற்றுலா மீண்டும் தொடங்கியது. அதே போல், வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில், இம்மாத தொடக்கம் முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக அணை நிரம்பி பவானியாற்றில் நீர் திறக்கப்பட்டது.
அந்த ஆற்றில் ஏற்பட்ட வெளியேற்றப்பட்ட நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள பரளிக்காடு என்ற இடத்தில் வனத்துறை சார்பில் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக கடந்த 10-ம் தேதி வனத்துறை அறிவித்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக மழையின் அளவு குறைந்து அணையின் நீர்மட்டமும் அதன் நீர்வரத்தும் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டிருந்த சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

குற்றாலம்

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மீண்டும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்ய:-
http://coimbatorewilderness.com/Booking-Baralikadu.aspx