முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகன் கொலை: மூவர் கைது

திருப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேலூரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேலூரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் ஊற்றுக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உறவினர் வகையில் மருமகன்.

திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் இவர் நேற்று காலை பனியன் நிறுவனத்திற்கு சென்று வருவதாக காரில் வெளியே சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் வராததால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்காமல் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அவரது தந்தை சின்னசாமி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில், சிவமூர்த்தியின் உடல் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர்.



இந்த நிலையில், சிவமூர்த்தியின் சொகுசு கார் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் வெங்கிளி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்து தப்பியோடிய விமல், கவுதமன், மணிபாரதி ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்து இரண்டு நாட்களாக காரில் வைத்து வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி இடையே பயணித்ததாகவும், இறுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் உடலை வீசி இருந்ததாகவும் தெரிவித்தனர்.



மேலும், சிவமூர்த்தி தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்ததால், அந்த பெண்ணின் கணவர் இந்த கொலையை செய்ததாக தகவல் அளித்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...