திருப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேலூரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேலூரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஊற்றுக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உறவினர் வகையில் மருமகன்.
திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் இவர் நேற்று காலை பனியன் நிறுவனத்திற்கு சென்று வருவதாக காரில் வெளியே சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் வராததால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்காமல் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அவரது தந்தை சின்னசாமி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில், சிவமூர்த்தியின் உடல் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர்.

இந்த நிலையில், சிவமூர்த்தியின் சொகுசு கார் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் வெங்கிளி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்து தப்பியோடிய விமல், கவுதமன், மணிபாரதி ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்து இரண்டு நாட்களாக காரில் வைத்து வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி இடையே பயணித்ததாகவும், இறுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் உடலை வீசி இருந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும், சிவமூர்த்தி தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்ததால், அந்த பெண்ணின் கணவர் இந்த கொலையை செய்ததாக தகவல் அளித்துள்ளனர்.