கோவை: கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் அவனாசிலிங்கம் 5-ம் ஆண்டு முதல் நினைவேந்தல் மற்றும் மறைந்த சேலம் தினகரன் நாளிதழின் ஆசிரியர் வெங்கடேசனின் பட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் அவனாசிலிங்கம் 5-ம் ஆண்டு முதல் நினைவேந்தல் மற்றும் மறைந்த சேலம் தினகரன் நாளிதழின் ஆசிரியர் வெங்கடேசனின் பட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு ஊடகங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் அவனாசிலிங்கம் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களுடன் பணியாற்றிய நினைவலைகளைக் குறித்து தீக்கதிர் நிருபர் பாபு, மூத்த பத்திரிக்கையாளர் அமுதா, தந்தி நாளிதழ் நிருபர் ஆசாத், சன் டிவி நிருபர் மார்டின் மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி, எழுத்தாளர் பாமரன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர், நடைபெற்ற நிகழ்வில் மறைந்த சேலம் தினகரன் நாளிதழ் ஆசிரியர் வெங்கடேசன் திருவுருவ படத்தை, கோவை தினகரன் பதிப்பு ஆசிரியர் காளிதாஸ் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் பின்னர், அவனாசிலிங்கம் அறக்கட்டளை சார்பில் மூன்று மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும், ஒருவருக்கு மருத்துவ உதவி தொகையும் வழங்கப்பட்டது. இதனை அவனாசிலிங்கத்தின் துணைவி கிருபாவதி, மகன் அகிலன் சொர்கோ, மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி, தினகரன் நாளிதழ் செய்தி ஆசிரியர் காளிதாஸ் ஆகியோர் வழங்கினர்.
கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு ஊடகங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் அவனாசிலிங்கம் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களுடன் பணியாற்றிய நினைவலைகளைக் குறித்து தீக்கதிர் நிருபர் பாபு, மூத்த பத்திரிக்கையாளர் அமுதா, தந்தி நாளிதழ் நிருபர் ஆசாத், சன் டிவி நிருபர் மார்டின் மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி, எழுத்தாளர் பாமரன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர், நடைபெற்ற நிகழ்வில் மறைந்த சேலம் தினகரன் நாளிதழ் ஆசிரியர் வெங்கடேசன் திருவுருவ படத்தை, கோவை தினகரன் பதிப்பு ஆசிரியர் காளிதாஸ் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் பின்னர், அவனாசிலிங்கம் அறக்கட்டளை சார்பில் மூன்று மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும், ஒருவருக்கு மருத்துவ உதவி தொகையும் வழங்கப்பட்டது. இதனை அவனாசிலிங்கத்தின் துணைவி கிருபாவதி, மகன் அகிலன் சொர்கோ, மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி, தினகரன் நாளிதழ் செய்தி ஆசிரியர் காளிதாஸ் ஆகியோர் வழங்கினர்.