மந்தாடா விபத்தின்போது சிறப்பாக செயல்பட்ட பொதுமக்களுக்கு எஸ்.பி பாராட்டு

நீலகிரி : 9 பேரை பலி கொண்ட குன்னூர் பேருந்து விபத்தின் போது, மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்களை நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பாராட்டு தெரிவித்தார்.


நீலகிரி : 9 பேரை பலி கொண்ட குன்னூர் பேருந்து விபத்தின் போது, மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்களை நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பாராட்டு தெரிவித்தார். 



கடந்த சில நாட்களுக்கு முன் மந்தாடா குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடத்துநர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது, அருகில் இருந்த பொதுமக்கள், உயிரைப் பொருட்படுத்தாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், விபத்து நடந்த ஒருமணி நேரத்தில் மீட்பு பணிகள் முடிந்தது.



இந்த நிலையில், இந்தக் களப்பணியில் கலந்து கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரையும் பாராட்டிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, இது மகத்தான மனிதாபிமானம் கொண்ட நிகழ்வு என பலரையும் பாராட்டினார். மேலும், இவ்வளவு பெரிய விபத்து நடந்த போதும் அமைதியாக ஆத்மார்த்தமாக அனைவரும் மீட்பு பணிகள் ஈடுபட்டது மிகவும் பாராட்டுக்குரியது என்றார். இதைத்தொடர்ந்து, அவர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திருமேணி, கேத்தி காவல் ஆய்வாளர் விநாயகம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...