பல்லடம் அருகே மளிகை கடையில் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூர்: பல்லடம் அருகே மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.60,000 கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.60,000 கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நொச்சிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் செந்தில். அதே பகுதியில் கடந்த 15 வருடங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார். 



இந்நிலையில், நேற்று வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று கடையை திறந்த அவர் அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடைப்பதை பார்த்தார். மேலும், கடையில் இருந்த ரூ. 60,000 பணம் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரித்ததில் கடையின் மேற்கூரையைப் பிரித்து மர்ம நபர் கடைக்குள் உள்ளே இறங்கியது தெரிய வந்தது.

தொடர்ந்து, கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து கடையின் உள்ளே இறங்கி திருடி சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...