கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்குக் கையகப்படுத்தப்படும் விவகாரம்: கோரிக்கையும்...! விளக்கமும்.!

கோவை: கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையமானது 600 ஏக்கர் பரப்பளவில் 9 ஆயிரம் அடி ஓடு பாதையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரக்கு விமானங்களும், சர்வதேச விமானங்களும் அதிக அளவில் இயக்க 12 ஆயிரம் அடி ஓடு பாதை தேவைப்படுகிறது. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என சொல்லக்கூடிய கோவை மாநகரின் வளர்ச்சிக்கு இந்த விமான நிலைய விரிவாக்கம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை அடுத்து 2010-ம் ஆண்டு முதல் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக நிலங்களைக் கையகப்படுத்த பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒருபகுதியாக 624 ஏக்கர் நிலங்கள் விமான நிலையத்தை ஒட்டியுள்ள சின்னையம்பாளையம், இருகூர், நிலம்பூர், நீலிக்கோணாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டன. இதில், 461 ஏக்கர் பட்டா நிலங்கள், 28 ஏக்கர் பயன்படுத்தப்படாத புறம்போக்கு நிலங்கள், முப்படைகளுக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலங்கள் அடங்கும்.

இதனிடையே, விவசாய நிலங்களுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 900 எனவும், வீடுகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 1,500 எனவும் நிலம் கையெகப்படுத்துவது தொடர்பாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது உள்ள சந்தை மதிப்பின்படி இது மிகவும் குறைவு என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், ஒரு சதுர அடிக்கு ரூ. 2,500 முதல் ரூ.3,000 வரை விலை நிர்ணயம் செய்வதே சரியானதாக இருக்கும் எனவும் அவர்கள் வலியுறுத்ரி வருகின்றனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு அதிக இழப்பீடு தொகை அறிவித்துள்ளார்கள். அதே போல, எங்களுக்கும் அதிக இழப்பீடு தொகை வேண்டும்," என்றார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அரசுக் கூடுதல் தலைமை செயலரும், நில நிர்வாக ஆணையருமான மோகன் பியாரே நிலங்கள் கையகப்படுத்தும் இடங்களுக்கு அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் அப்பகுதி விவசாயிகள், மக்கள் உரிய விலை நிர்ணயம் செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என மனுக்கள் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, நிலங்கள் 24 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதற்கு ஏற்றாற்போல பகுதி வாரியாக இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து இண்டஸ்ட்ரியல் அசோசியேசனை சேர்ந்த விக்ரம் விஜய் கூறுகையில், "கோவை வளர்ச்சியடைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதில், எந்தவிதமான சந்தேகமும் இல்லை. விமான நிலைய விரிவாக்கத்திற்காகப் பல கட்டங்களாக நிலங்கள், விவசாய நிலங்கள், புறம்போக்கு, ரெசிடென்சியல் எனப் பிரிக்கப்பட்டு இழப்பீடுகள் வழங்க விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், பெரிதும் பாதிக்கப்படுவது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் வைத்திருப்போர் தான். சதுர அடிக்கு ரூ. 1,500 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய சந்தை மதிப்புப்படி அது ரூ. 2500 முதல் ரூ.3,000 வரை மதிப்பு ஆகும்.

அதே சமயம் கட்டடங்களுக்கு எந்த விலையும் இன்று வரை நிர்ணயம் செய்யவில்லை. மேலும், மாற்று இடங்கள் குறித்த அறிவிப்பு குறித்தும் எந்தத் தெளிவான தகவல் இல்லை. விமான நிலைய விரிவாக்கத்திற்காக தங்கள் வாழ்நாள் சேமிப்பான வீடுகளையும், உழைப்பினையும் இழக்க உள்ள மக்களுக்கு அரசாங்கம் நம்பிக்கையாக செயல்பட வேண்டும். உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும். விரிவாக்கப் பணிகளால் பலர் வாழ்வாதாரத்தையே இழக்கப் போகிறார்கள் அவர்களுக்கு உறுதுணையாக அரசாங்கம் செயல்பட வேண்டும். 8 ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஒரு உயர்மட்டக் குழு ஆய்வுக்கு வந்துள்ளது. எங்கள் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும், அதற்கான மாற்று என அந்தக் குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்," என்றார்.

இது குறித்து கோவை மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) மற்றும் நில எடுப்பு அலுவலர் ப. சிதம்பரம் கூறுகையில், "விரிவாக்கப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நிலம் எடுப்பு தொடர்பாக யாரும் எதிர்ப்பு இல்லை. விலை நிர்ணயம் சரியான மதிப்பீட்டில் தான் உள்ளது. விரைவில் மதிப்பீட்டில் உள்ளவாறு இழப்பீடுகள் வழங்கப்படும். இழப்பீடு தொகை அதிகப்படுத்தப்படாது," என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...