காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு; மூக்கைப் பிடிக்கும் பயணிகள்

கோவை: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் வெளியேறி பயணிகளை அவதிக்குள்ளாக்கியது.

கோவை: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் வெளியேறி பயணிகளை அவதிக்குள்ளாக்கியது.

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தில் நான்கு தளங்கள் உள்ளன. இங்கு திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்படும் முதல் தளத்தில், கழிவுநீர் குழாயில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு அவ்வப்போது சரி செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், தாய்மார்கள் பாலூட்டும் அறையின் வாசலில் இன்று காலை மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறியது. இதனால், பேருந்து ஓட்டுநர்களும், பயணிகளும் கடும் அவதியடைந்தனர்.

"ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. தூய்மை நகரங்கள் ஆய்வு, அமைச்சர்களின் வருகை போன்ற நாட்களில் மட்டுமே சுத்தமாக இருப்பது போல் பராமரிக்கப்படுகின்றன." என்று குற்றம்சாட்டுகிறார் தினமும் கோவையில் இருந்து திருப்பூர் சென்றுவரும் பயணி ஒருவர்.

இது தொடர்பாக, மாநகராட்சி ஊழியர்களிடம் புகாரளிக்கப்பட்டு கழிவுநீர் உடைப்பு சரி செய்யப்பட்டது.



பேருந்து நிலையங்களில் அமைக்கப்படும் உணவகங்கள், பேக்கரிகள் போன்ற கடைகளால் அதிக அளவு கழிவு நீரும், குப்பைகளும் உருவாவதாக பெரும்பாலானோர் புகார் தெரிவிக்கின்றனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...