கோவை: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் வெளியேறி பயணிகளை அவதிக்குள்ளாக்கியது.
கோவை: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் வெளியேறி பயணிகளை அவதிக்குள்ளாக்கியது.
காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தில் நான்கு தளங்கள் உள்ளன. இங்கு திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்படும் முதல் தளத்தில், கழிவுநீர் குழாயில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு அவ்வப்போது சரி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தாய்மார்கள் பாலூட்டும் அறையின் வாசலில் இன்று காலை மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறியது. இதனால், பேருந்து ஓட்டுநர்களும், பயணிகளும் கடும் அவதியடைந்தனர்.
"ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. தூய்மை நகரங்கள் ஆய்வு, அமைச்சர்களின் வருகை போன்ற நாட்களில் மட்டுமே சுத்தமாக இருப்பது போல் பராமரிக்கப்படுகின்றன." என்று குற்றம்சாட்டுகிறார் தினமும் கோவையில் இருந்து திருப்பூர் சென்றுவரும் பயணி ஒருவர்.
இது தொடர்பாக, மாநகராட்சி ஊழியர்களிடம் புகாரளிக்கப்பட்டு கழிவுநீர் உடைப்பு சரி செய்யப்பட்டது.

பேருந்து நிலையங்களில் அமைக்கப்படும் உணவகங்கள், பேக்கரிகள் போன்ற கடைகளால் அதிக அளவு கழிவு நீரும், குப்பைகளும் உருவாவதாக பெரும்பாலானோர் புகார் தெரிவிக்கின்றனர்.

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தில் நான்கு தளங்கள் உள்ளன. இங்கு திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்படும் முதல் தளத்தில், கழிவுநீர் குழாயில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு அவ்வப்போது சரி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தாய்மார்கள் பாலூட்டும் அறையின் வாசலில் இன்று காலை மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறியது. இதனால், பேருந்து ஓட்டுநர்களும், பயணிகளும் கடும் அவதியடைந்தனர்.
"ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. தூய்மை நகரங்கள் ஆய்வு, அமைச்சர்களின் வருகை போன்ற நாட்களில் மட்டுமே சுத்தமாக இருப்பது போல் பராமரிக்கப்படுகின்றன." என்று குற்றம்சாட்டுகிறார் தினமும் கோவையில் இருந்து திருப்பூர் சென்றுவரும் பயணி ஒருவர்.
இது தொடர்பாக, மாநகராட்சி ஊழியர்களிடம் புகாரளிக்கப்பட்டு கழிவுநீர் உடைப்பு சரி செய்யப்பட்டது.

பேருந்து நிலையங்களில் அமைக்கப்படும் உணவகங்கள், பேக்கரிகள் போன்ற கடைகளால் அதிக அளவு கழிவு நீரும், குப்பைகளும் உருவாவதாக பெரும்பாலானோர் புகார் தெரிவிக்கின்றனர்.
