கோவை: மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் வெற்றிகரமாக மாற்றி நடவு செய்யப்பட்டதுடன், அதன் பாகங்களை பிரித்து 100 இடங்களில் நடவு செய்யும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.
கோவை: மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் வெற்றிகரமாக மாற்றி நடவு செய்யப்பட்டதுடன், அதன் பாகங்களை பிரித்து 100 இடங்களில் நடவு செய்யும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.

மாநகரின் புறநகர் பகுதியான கவுண்டம்பாளையம் பகுதியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் பரந்து விரிந்து வளர்ந்து இருந்தது. இதனை மாற்றி நடவு செய்யும் பணி ஓசை தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அதன் கிளைகள் வெட்டப்பட்டு, கவுண்டம்பாளையம் சந்திப்பில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாற்றி நடவு செய்யப்பட்டது. மேலும், இதில், வெட்டப்பட்ட கிளைகள் 100 செடிகளாக நடப்பட்டது.

இது குறித்து ஓசை அமைப்பின் கே. சையத் கூறுகையில், "கோவை மாவட்ட நலவாரியம் சார்பில் முதியோர் இல்லம் கட்டுவதற்கு இடையூறாக இருந்ததால், இந்தப் பழமை வாய்ந்த மரத்தை மாற்றி நடவு செய்ய மாற்றி நடவு செய்யப்பட்டது. இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக அமைந்தது. இயற்கைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் தொண்டு நிறுவனங்களின் உதவியால், துடியலூர் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது. நாற்றுகள் தளிர்ந்தவுடன், நிரந்தரமாக நடவு செய்யப்பட உள்ளது."
மேலும், இந்த மரத்தின் இலை, தழைகள் சாடிவயல் யானைகள் முகாமிகள் உள்ள யானைகளுக்கு உணவுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


மாநகரின் புறநகர் பகுதியான கவுண்டம்பாளையம் பகுதியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் பரந்து விரிந்து வளர்ந்து இருந்தது. இதனை மாற்றி நடவு செய்யும் பணி ஓசை தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அதன் கிளைகள் வெட்டப்பட்டு, கவுண்டம்பாளையம் சந்திப்பில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாற்றி நடவு செய்யப்பட்டது. மேலும், இதில், வெட்டப்பட்ட கிளைகள் 100 செடிகளாக நடப்பட்டது.

இது குறித்து ஓசை அமைப்பின் கே. சையத் கூறுகையில், "கோவை மாவட்ட நலவாரியம் சார்பில் முதியோர் இல்லம் கட்டுவதற்கு இடையூறாக இருந்ததால், இந்தப் பழமை வாய்ந்த மரத்தை மாற்றி நடவு செய்ய மாற்றி நடவு செய்யப்பட்டது. இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக அமைந்தது. இயற்கைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் தொண்டு நிறுவனங்களின் உதவியால், துடியலூர் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது. நாற்றுகள் தளிர்ந்தவுடன், நிரந்தரமாக நடவு செய்யப்பட உள்ளது."
மேலும், இந்த மரத்தின் இலை, தழைகள் சாடிவயல் யானைகள் முகாமிகள் உள்ள யானைகளுக்கு உணவுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
