திருப்பூர்: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
திருப்பூர்: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருப்பூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். தென்னம்பாளையம் அரசு பள்ளியில் இருந்து பல்லடம் சாலை வழியாக அரசு கலைக்கல்லூரி வரை ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியை மாநகர காவல் ஆணையர் மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதே போல், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய இந்த பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் சென்றடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருப்பூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். தென்னம்பாளையம் அரசு பள்ளியில் இருந்து பல்லடம் சாலை வழியாக அரசு கலைக்கல்லூரி வரை ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியை மாநகர காவல் ஆணையர் மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதே போல், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய இந்த பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் சென்றடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.
