திருப்பூர், நீலகிரியில் போதை பொருள் எதிர்ப்பு தின பேரணி

திருப்பூர்: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

திருப்பூர்: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.



சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருப்பூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். தென்னம்பாளையம் அரசு பள்ளியில் இருந்து பல்லடம் சாலை வழியாக அரசு கலைக்கல்லூரி வரை ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியை மாநகர காவல் ஆணையர் மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இதே போல், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய இந்த பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் சென்றடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...