ஆவாரம்பாளையம்-கணபதி மேம்பால பணிகளை தொடங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கோவை: ஆவாரம்பாளையம்-கணபதி இடையேயான மேம்பால பணிகளை தொடங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்ட குழுவினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: ஆவாரம்பாளையம்-கணபதி இடையேயான மேம்பால பணிகளை தொடங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்ட குழுவினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகரையும் கணபதி பகுதியையும் இணைக்கும் வகையில் ஆவாரம்பாளையம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம், அங்கு மேம்பாலம் கட்ட ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து ரயில்வே துறை சார்பில் பணிகள் தொடங்கப்பட்டதால் அந்த சாலை மூடப்பட்டு மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கணபதி சென்று வருகின்றனர்.

ரயில்வே பால பணிகள் சுமார் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் அணுகு சாலை அமைக்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து ஆவாரம்பாளையம் கணபதி ரயில்வே மேம்பால போராட்ட குழு சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அப்போது பேசிய போராட்ட குழு தலைவர் கோபால், "அணுகு சாலை அமைப்பதற்கு 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே பாதையின் இருபுறமும் சுமார் முக்கால் ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்காக 43 பயனாளிகள் நில ஆர்ஜிதம் செய்ய ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளனர். அவ்வாறு ஒப்புதல் வழங்கியவர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படாமலும், நிலம் கையகப்படுத்தாமலும் இருப்பதால் மேம்பால பணிகள் தாமதமாகிறது.

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலம் போல இந்த பாலமும் பணிகள் தாமதமானால் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் தமிழக அரசு விரைந்து மேம்பால பணிகளை செய்ய வேண்டும்." என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...