கோவை: தோட்டாக்களுடன் கோவை விமான நிலையத்தில் புகுந்த பா.ஜ.க., பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: தோட்டாக்களுடன் கோவை விமான நிலையத்தில் புகுந்த பா.ஜ.க., பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட கோட்ட பொறுப்பாளராக இருப்பவர் செல்வகுமார். இவர் இன்று காலை கோவையிலிருந்து சென்னை செல்ல விமான நிலையம் சென்றார். அப்போது அவரை சோதனை செய்த சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு படையினர் அவரிடம் துப்பாக்கியின் தோட்டக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக, பீளமேடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார், செல்வகுமார் பா.ஜ.க., பிரமுகர் என்பதையும், அவர் வைத்திருப்பது உரிமம் பெற்ற தோட்டாக்கள் தான் என்பதையும் சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு படையினரிடையே தெரிவித்தனர்.
பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தவறுதலாக தோட்டாக்களை எடுத்து வந்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து, அவற்றை தனது கார் ஓட்டுனரிடம் கொடுத்துவிட்டு விமானம் மூலமாக அவர் சென்னை புறப்பட்டார். கோவையை சேர்ந்த பா.ஜ.க., பிரமுகர் மறதியாக துப்பாக்கி குண்டுகளுடன் விமான பயணம் மேற்கொள்ள வந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட கோட்ட பொறுப்பாளராக இருப்பவர் செல்வகுமார். இவர் இன்று காலை கோவையிலிருந்து சென்னை செல்ல விமான நிலையம் சென்றார். அப்போது அவரை சோதனை செய்த சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு படையினர் அவரிடம் துப்பாக்கியின் தோட்டக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக, பீளமேடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார், செல்வகுமார் பா.ஜ.க., பிரமுகர் என்பதையும், அவர் வைத்திருப்பது உரிமம் பெற்ற தோட்டாக்கள் தான் என்பதையும் சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு படையினரிடையே தெரிவித்தனர்.
பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தவறுதலாக தோட்டாக்களை எடுத்து வந்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து, அவற்றை தனது கார் ஓட்டுனரிடம் கொடுத்துவிட்டு விமானம் மூலமாக அவர் சென்னை புறப்பட்டார். கோவையை சேர்ந்த பா.ஜ.க., பிரமுகர் மறதியாக துப்பாக்கி குண்டுகளுடன் விமான பயணம் மேற்கொள்ள வந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.