கோவையில் குடிநீர் வினியோகம் தொடர்பாக வதந்தி: போலீசாரிடம் மாநகராட்சி நிர்வாகம் புகார்

கோவை: கோவையில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



கோவை: கோவையில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன், மாநகராட்சி ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, 26 ஆண்டுகளுக்கு, சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து, இனி குடிநீர் கட்டணத்தை யார் விதிப்பார்கள்? குடிநீர் கட்டணம் உயருமா? பொது குழாய்களின் நிலை என்ன? போன்ற கேள்விகள் எழுந்தது.

குடிநீரை தனியார் மயப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து, சூயஸ் நிறுவனம், சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கவும் மற்றும் அவற்றை பராமரிக்கும் பணிகளில் தான் ஈடுபடும் என்றும் கட்டணம் நிர்ணயிப்பது முதல் மற்ற அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், சூயஸ் உடனான ஒப்பந்தம் குறித்து, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன் மாநகராட்சி சார்பில், சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் உண்மைக்கு புறம்பாக வதந்தியை கிளப்பியவர்கள் மீது உக்கடம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 504, 505(II)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...