கோவையில் மனநலம் பாதித்த மகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தை

கோவை: தெப்பக்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க முடியாத வயதான தந்தை, மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: தெப்பக்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க முடியாத வயதான தந்தை, மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெப்பக்குளம் அருகே உள்ள லிங்கப்ப செட்டி வீதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் முத்து. இவரது மனைவி வேலம்மாள். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்ததை அடுத்து, மகன் கணேசன் மற்றும் மகள் ராதாவை முத்து பராமரித்து வந்தார்.

நாற்பது வயதான கணேசனுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் கடந்த 20 வருடங்களாக வீட்டிலே வைத்து பராமரித்து வந்துள்ளனர். அவ்வப்போது கணேசன் ஆக்ரோசத்தோடு நடந்து கொண்டு, அவரது தந்தையை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு கணேசன் மீண்டும் ஆக்ரோசமாக நடந்து கொண்டார். அவரை கட்டுப்படுத்த முடியாத அவரது வயதான தந்தை, மயக்க மாத்திரைகளை கணேசனுக்கு கொடுத்து வீட்டில் இருந்த அம்மிக்கல்லை கணேசனின் தலையில் போட்டு கொலை செய்தார். 



அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற ஆர்.எஸ். புரம் போலீசார் கணேசனின் உடலை கைபற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், முத்துவை கைது செய்தனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...