கோவை: தெப்பக்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க முடியாத வயதான தந்தை, மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: தெப்பக்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க முடியாத வயதான தந்தை, மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தெப்பக்குளம் அருகே உள்ள லிங்கப்ப செட்டி வீதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் முத்து. இவரது மனைவி வேலம்மாள். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்ததை அடுத்து, மகன் கணேசன் மற்றும் மகள் ராதாவை முத்து பராமரித்து வந்தார்.
நாற்பது வயதான கணேசனுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் கடந்த 20 வருடங்களாக வீட்டிலே வைத்து பராமரித்து வந்துள்ளனர். அவ்வப்போது கணேசன் ஆக்ரோசத்தோடு நடந்து கொண்டு, அவரது தந்தையை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு கணேசன் மீண்டும் ஆக்ரோசமாக நடந்து கொண்டார். அவரை கட்டுப்படுத்த முடியாத அவரது வயதான தந்தை, மயக்க மாத்திரைகளை கணேசனுக்கு கொடுத்து வீட்டில் இருந்த அம்மிக்கல்லை கணேசனின் தலையில் போட்டு கொலை செய்தார்.

அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற ஆர்.எஸ். புரம் போலீசார் கணேசனின் உடலை கைபற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், முத்துவை கைது செய்தனர்.
