கோவை: கோவை குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரை காருண்யா போலீசார் அடையாளம் கண்டனர்.
கோவை: கோவை குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரை காருண்யா போலீசார் அடையாளம் கண்டனர்.
கனமழை காரணமாக 11 நாட்களுக்குப் பிறகு கடந்த 21-ம் தேதி மீண்டும் கோவை குற்றாலத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால், அங்கு பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். இந்த சூழலில், அருவியில் குளித்து கொண்டிருந்த போது இளைஞர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அந்த இளைஞரின் பிரேதத்தைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த இளைஞரின் விபரம் தெரியாமல் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிப்பது என போலீசார் குழம்பி நின்றனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞரின் பெயர் அஸ்வின் (25) என்பதும், அவர் பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
கனமழை காரணமாக 11 நாட்களுக்குப் பிறகு கடந்த 21-ம் தேதி மீண்டும் கோவை குற்றாலத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால், அங்கு பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். இந்த சூழலில், அருவியில் குளித்து கொண்டிருந்த போது இளைஞர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அந்த இளைஞரின் பிரேதத்தைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த இளைஞரின் விபரம் தெரியாமல் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிப்பது என போலீசார் குழம்பி நின்றனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞரின் பெயர் அஸ்வின் (25) என்பதும், அவர் பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.