கோவை: கோவையில் உணவு பாதுகப்புத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பான்மசாலா மற்றும் கலப்பட டீ தூள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் உணவு பாதுகப்புத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பான்மசாலா மற்றும் கலப்பட டீ தூள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்கள், பழக்கடைகள் மற்றும் குளிர்பான விற்பனையகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு சோதனையின் போது தடைசெய்யப்பட்ட பொருட்கள், கலப்பட பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். கடந்த வாரம் அன்னூர் பகுதியில் நடத்திய சோதனையில் பிரபல சமையல் எண்ணெய் பெயரில் இயங்கி வந்த போலி எண்ணெய் நிறுவனத்தில் அதிரடி சோதனை செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், இன்று உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் எட்டு அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து சூலூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அங்குள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் நடத்திய சோதனையின் போது, 1.4 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட குட்கா மற்றும் பான்மசாலா, கலர் சில்லி பவுடர்கள், இரண்டு கிலோ கலப்பட டீ தூள், சேதமடைந்த பிஸ்கட்டுகள் மற்றும் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 27 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த சோதனையானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்கள், பழக்கடைகள் மற்றும் குளிர்பான விற்பனையகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு சோதனையின் போது தடைசெய்யப்பட்ட பொருட்கள், கலப்பட பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். கடந்த வாரம் அன்னூர் பகுதியில் நடத்திய சோதனையில் பிரபல சமையல் எண்ணெய் பெயரில் இயங்கி வந்த போலி எண்ணெய் நிறுவனத்தில் அதிரடி சோதனை செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், இன்று உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் எட்டு அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து சூலூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அங்குள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் நடத்திய சோதனையின் போது, 1.4 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட குட்கா மற்றும் பான்மசாலா, கலர் சில்லி பவுடர்கள், இரண்டு கிலோ கலப்பட டீ தூள், சேதமடைந்த பிஸ்கட்டுகள் மற்றும் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 27 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த சோதனையானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.