கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் வனவிலங்குகள் நீர் அருந்த வருவதற்கு தடையாக இருந்த மின்வேலிகள் அனைத்தும் முழுமையாக அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் வனவிலங்குகள் நீர் அருந்த வருவதற்கு தடையாக இருந்த மின்வேலிகள் அனைத்தும் முழுமையாக அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளான லிங்காபுரம், காந்தவயல், புதுக்காடு, வால்கரடு, இச்சிப்பாலி உள்ளிட்ட இடங்களில் பொதுப்பணித் துறையினரின் அனுமதியின் பேரில் இப்பகுதி விவசாயிகள் வாழை, காய்கறி பயிர்கள் என பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
அணையின் நீர்மட்டம் குறைந்திருக்கும் காலங்களில் இதன் நீர்த்தேக்க பகுதிகளில் விவசாயம் செய்யும் வழக்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. அணையின் நீர்த்தேக்க பகுதியில் தேங்கியுள்ள பவானி ஆற்று நீரை அருந்த அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து யானைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம்.
அப்போது யானைகள் மற்றும் மான் போன்ற வனவிலங்குகள் அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க விவசாயிகள் தங்களது சாகுபடி நிலங்களை சுற்றி சோலார் மற்றும் பேட்டெரி மூலம் இயங்கும் மின்வேலிகளை அமைத்தனர். வனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்வேலிகளால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் அருந்த வருவது தடைபட்டுள்ளது, இது இயற்கை சூழலை சீரழிக்கும் செயல் என தனி நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் வன உயிரினங்களின் நடமாட்டத்தை தடை செய்யும் மின்வேலிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து வனத்துறை, பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறை என்று என்பது பேர் குழுக்களாக பிரிந்து வனத்தை ஒட்டியுள்ள நீர்த்தேக்க பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலிகளை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், "வேலிகள் அப்புறப்படுத்தப்படுவதால் இனி யானை, மான் மற்றும் காட்டுப்பன்றிகள் மிக எளிதாக எங்கள் விவசாய பயிர்களை அழித்து சேதப்படுத்திவிடும். மின்வேலிகளை அகற்றும் வனத்துறையினர், இதற்கு பின்னர் யானைகளால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர் சேதங்களை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்." என்றனர்.
பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளான லிங்காபுரம், காந்தவயல், புதுக்காடு, வால்கரடு, இச்சிப்பாலி உள்ளிட்ட இடங்களில் பொதுப்பணித் துறையினரின் அனுமதியின் பேரில் இப்பகுதி விவசாயிகள் வாழை, காய்கறி பயிர்கள் என பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
அணையின் நீர்மட்டம் குறைந்திருக்கும் காலங்களில் இதன் நீர்த்தேக்க பகுதிகளில் விவசாயம் செய்யும் வழக்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. அணையின் நீர்த்தேக்க பகுதியில் தேங்கியுள்ள பவானி ஆற்று நீரை அருந்த அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து யானைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம்.
அப்போது யானைகள் மற்றும் மான் போன்ற வனவிலங்குகள் அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க விவசாயிகள் தங்களது சாகுபடி நிலங்களை சுற்றி சோலார் மற்றும் பேட்டெரி மூலம் இயங்கும் மின்வேலிகளை அமைத்தனர். வனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்வேலிகளால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் அருந்த வருவது தடைபட்டுள்ளது, இது இயற்கை சூழலை சீரழிக்கும் செயல் என தனி நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் வன உயிரினங்களின் நடமாட்டத்தை தடை செய்யும் மின்வேலிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து வனத்துறை, பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறை என்று என்பது பேர் குழுக்களாக பிரிந்து வனத்தை ஒட்டியுள்ள நீர்த்தேக்க பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலிகளை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், "வேலிகள் அப்புறப்படுத்தப்படுவதால் இனி யானை, மான் மற்றும் காட்டுப்பன்றிகள் மிக எளிதாக எங்கள் விவசாய பயிர்களை அழித்து சேதப்படுத்திவிடும். மின்வேலிகளை அகற்றும் வனத்துறையினர், இதற்கு பின்னர் யானைகளால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர் சேதங்களை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்." என்றனர்.