வரன்முறைபடுத்தப்பட்ட மனைகளுக்கான உத்தரவை பெற மண்டல அலுவலகங்களை அணுக அறிவுறுத்தல்

கோவை: மாநகராட்சியில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் வரன்முறைக் கட்டணங்களை செலுத்திய பின்னர் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் சமர்ப்பித்து உத்தரவு பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.


கோவை: மாநகராட்சியில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் வரன்முறைக் கட்டணங்களை செலுத்திய பின்னர் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் சமர்ப்பித்து உத்தரவு பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனையிடங்கள் வரன்முறை செய்தல் தொடர்பாக, தகுதி வாய்ந்த மனைப்பிரிவுகளில் அமைந்துள்ள தனிமனையினை வரன்முறை செய்யும்பொருட்டு மண்டல அலுவலகங்களிலிருந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், தனிமனைகளை அரசாணைகள் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு வரன்முறை செய்யவும் மண்டல உதவி ஆணையாளர்களுக்கு அதிகார பகிர்வு அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பரங்கள் அமைத்தல், பத்திரிக்கை செய்திகள் வெளியிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சியில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மனைகளை வரன்முறைப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வரன்முறைக் கட்டணங்களை செலுத்திய பின்னர் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமல் உள்ள பொதுமக்கள் உடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை அணுகி ஆவணங்களை சமர்ப்பித்து உத்தரவுகளை பெற்றுக்கொள்ளலாம். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...