திருப்பூரில் விலையுயர்ந்த பொருட்களை திருடிய 3 பெண்களுக்கு தர்மஅடி

திருப்பூர்: திருப்பூர் அருகே டையிங் நிறுவனத்தில் விலையுயர்ந்த பொருட்களை திருடிய பெண்களுக்கு தர்மஅடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே டையிங் நிறுவனத்தில் விலையுயர்ந்த பொருட்களை திருடிய பெண்களுக்கு தர்மஅடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். 

ஊத்துக்குளி சாலையில் உள்ள சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் சில பெண்கள் தோளில் சாக்குப்பையை மாட்டிக்கொண்டு கடந்த சில நாட்களாகக் குப்பை பொறுக்கி வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் பூட்டியிருந்த தனியாருக்கு சொந்தமான டையிங் நிறுவனத்துக்குள் ரகசியமாகப் புகுந்த 3 பெண்கள் அங்கிருந்த லேப்டாப், யு.பி.எஸ். பேட்டரி, மொபைல் போன் மின்மோட்டார் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை  திருடியுள்ளனர். 

பின்னர், அந்தப் பொருட்களை குப்பைகள் போல தோணியில் மூட்டைக் கட்டிக் கொண்டு, அருகே இருந்த சாக்கடை வாய்க்காலில் மறைத்து வைத்தனர். 

பின்னர், அவர்களுக்கு சொந்தமான ஆட்டோ ஒன்றை வரவழைத்து, அதில், கடத்தி வந்தப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டையிங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்தனர். அதற்கு, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தால், அவர்கள் ஏற்றிக்கொண்டிருந்த மூட்டைகளைப் பிரித்து பார்த்தனர். அதில், டையிங் நிறுவனத்தில் திருடிய பொருட்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



இது குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிந்ததையடுத்து, அங்கு ஒன்று திரண்ட பொதுமக்கள் அந்த திருட்டு கும்பலை சுற்றிவளைத்து தர்மஅடி கொடுத்தனர். மேலும், இதுகுறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திருட்டு கும்பலைச் சேர்ந்த 3 பெண்களை கைது செய்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...