'மரணமடைந்தவர்களை எடுத்து செல்ல மரண வேதனை அடைகிறோம்': நீலகிரி மக்கள் கண்ணீர் மனு

நீலகிரி: குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரட்டி ஊராட்சி பாரத் நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கீழ்பாரத் நகரில் சுமார் 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். கடந்த 40 வருடங்களாக எங்களுக்கு சாலை வசதியே இல்லை. பிரசவம் மற்றும் அவசர தேவைகளுக்கு செல்லும் போது கடும் வேதனைகளை சந்திக்கிறோம் மரணமடைந்தவர்களை எடுத்து செல்லும் போது மரண வேதனை அடைகிறோம்.

கழிவறை கழிவுகளை அப்புறப்படுத்த சாலை வசதி இல்லாததால் நாங்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாதது. தனியார் நிலம் வழியாக ஒற்றையடி பாதையில் சென்று வருகிறோம். எனவே அந்த பாதையை சாலையாக மாற்றித் தந்தால் அவசர தேவைகளுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...