நீலகிரி: குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நீலகிரி: குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரட்டி ஊராட்சி பாரத் நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கீழ்பாரத் நகரில் சுமார் 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். கடந்த 40 வருடங்களாக எங்களுக்கு சாலை வசதியே இல்லை. பிரசவம் மற்றும் அவசர தேவைகளுக்கு செல்லும் போது கடும் வேதனைகளை சந்திக்கிறோம் மரணமடைந்தவர்களை எடுத்து செல்லும் போது மரண வேதனை அடைகிறோம்.
கழிவறை கழிவுகளை அப்புறப்படுத்த சாலை வசதி இல்லாததால் நாங்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாதது. தனியார் நிலம் வழியாக ஒற்றையடி பாதையில் சென்று வருகிறோம். எனவே அந்த பாதையை சாலையாக மாற்றித் தந்தால் அவசர தேவைகளுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரட்டி ஊராட்சி பாரத் நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கீழ்பாரத் நகரில் சுமார் 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். கடந்த 40 வருடங்களாக எங்களுக்கு சாலை வசதியே இல்லை. பிரசவம் மற்றும் அவசர தேவைகளுக்கு செல்லும் போது கடும் வேதனைகளை சந்திக்கிறோம் மரணமடைந்தவர்களை எடுத்து செல்லும் போது மரண வேதனை அடைகிறோம்.
கழிவறை கழிவுகளை அப்புறப்படுத்த சாலை வசதி இல்லாததால் நாங்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாதது. தனியார் நிலம் வழியாக ஒற்றையடி பாதையில் சென்று வருகிறோம். எனவே அந்த பாதையை சாலையாக மாற்றித் தந்தால் அவசர தேவைகளுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.