ரத்தினபுரி கீழ் பாலம் வழியாகச் சென்று விபத்தில் சிக்கும் மக்கள்

கோவை: ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பன் நகர் ரயில்வே கீழ் பாலம் கட்டுமான பணிகள் முடிவு பெறாத நிலையில் பொதுமக்கள் அவ்வழியாக வாகனங்களில் சென்று சிறு,சிறு விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.


கோவை: ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பன் நகர் ரயில்வே கீழ் பாலம் கட்டுமான பணிகள் முடிவு பெறாத நிலையில் பொதுமக்கள் அவ்வழியாக வாகனங்களில் சென்று சிறு, சிறு விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.

கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட ரத்தினபுரி அருகே உள்ள தயிர்டேரி-கண்ணப்பன் நகர் ரயில்வே கீழ் பாலம் பணிகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தமிழக அரசால் ரூ.14 கோடி நிதியுடன் அறிவிக்கப்பட்டது. தற்போது அங்கு கீழ் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து ரத்தினபுரி வழியாக சிவானந்தா காலனி செல்லவும், கண்ணப்பன் நகர், தயிர்டேரி பகுதியிலிருந்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லவும் இந்த ரயில்வே கீழ் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இவ்வழியாக ரயில்வே கிராசிங்கை கடந்து தான் மக்கள் செல்லும் சூழ்நிலை நிலவி வந்தது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

90 சதவீதம்

பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியதிலிருந்தே வாகனங்கள் 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் வரை சங்கனூர் பாலம் வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதனிடையே ரயில்வே கீழ் பாலம் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பாலத்தின் மீது வாகனங்கள் உரசாமல் இருக்க தடுப்பான்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.



இந்நிலையில், கீழ் பாலம் கட்டுமான பணிகளுக்காக தற்போது எந்த தடுப்புகளும் இல்லாமல் காணப்படுகிறது. கீழ் பாலம் வழியாக செல்ல இதனை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். சாலை இன்னும் அமைக்கப்படாத காரணத்தினால் மணல் மேடுகள் உள்ளன அதில் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது நிலைதடுமாறி சிலர் கீழே விழுந்து விடுகின்றனர்.



இது குறித்து அவ்வழியாகச் செல்லும் ராஜ்குமார் என்கிற வாகன ஓட்டி கூறுகையில், "பாலம் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். தற்போது பாலம் திறக்கப்படாத நிலையில் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வழியாக சென்றால் மட்டுமே விரைவாக அலுவலகங்களுக்கும் மற்ற பணிகளுக்கும் செல்ல முடிகிறது. சுற்றிச் செல்வதால் 30 முதல் 40 நிமிடங்கள் காலதாமதம் ஏற்படுகின்றது." என்றார்.



பாலத்தின் கீழே செல்லக்கூடாது என தடுப்புகளை அமைத்தாலும் அதனை ஒரு சிலர் அகற்றிவிட்டு பயணிக்கின்றனர். காவல்துறையினர் இதனை உடனே கண்காணித்து விபத்துகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருகில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து கீழ் பாலம் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரி ஒருவர் கூறுகையில், "90 சதவீதம் கோவை பணிகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமையாக அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிடும். அதுவரை பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்." என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...