கோவை: தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதன் மூலமாக அதனை விவசாய நிலங்களை மாற்ற வேண்டும் என்று கோவை வன வேளாண்மை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் நிபுணர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை: தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதன் மூலமாக அதனை விவசாய நிலங்களை மாற்ற வேண்டும் என்று கோவை வன வேளாண்மை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் நிபுணர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் நேற்று சித்தாப்புதூர் மாநகராட்சி பள்ளியில் சூழல் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாராயணசாமி பேசியதாவது:-
கோவையில் 99 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் விவசாயம் செய்யாமல் தரிசு நிலங்களாக உள்ளன. 2.65 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதிலும், தொடர்ந்து விவசாயம் செய்யப்படுவது இல்லை. வருடத்திற்கு ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்கின்றனர்.
விவசாயம் செய்யாத நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிடும். அத்தகைய நிலங்கள் மழை நீரைக் கூட சேமிக்க இயலாத நிலங்களாக மாறும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்களுக்கு ஒரு நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படாமல் இருந்தால் அந்த நிலத்தை தரிசு நிலம் என்று அரசு அறிவிக்கும்.
அவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலங்களை சுலபமாக தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துவிட முடியும். ஆகவே, தரிசாக உள்ள நிலங்களில் விவசாயம் செய்யும் பணியை உடனடியாக தொடங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் நேற்று சித்தாப்புதூர் மாநகராட்சி பள்ளியில் சூழல் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாராயணசாமி பேசியதாவது:-
கோவையில் 99 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் விவசாயம் செய்யாமல் தரிசு நிலங்களாக உள்ளன. 2.65 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதிலும், தொடர்ந்து விவசாயம் செய்யப்படுவது இல்லை. வருடத்திற்கு ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்கின்றனர்.
விவசாயம் செய்யாத நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிடும். அத்தகைய நிலங்கள் மழை நீரைக் கூட சேமிக்க இயலாத நிலங்களாக மாறும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்களுக்கு ஒரு நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படாமல் இருந்தால் அந்த நிலத்தை தரிசு நிலம் என்று அரசு அறிவிக்கும்.
அவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலங்களை சுலபமாக தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துவிட முடியும். ஆகவே, தரிசாக உள்ள நிலங்களில் விவசாயம் செய்யும் பணியை உடனடியாக தொடங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.