கோவை: உக்கடம் வாலாங்குளத்தில் கொட்டப்பட்டிருந்த நான்கு டன் பிளாஸ்டிக் கழிவுகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று அகற்றினர்.
கோவை: உக்கடம் வாலாங்குளத்தில் கொட்டப்பட்டிருந்த நான்கு டன் பிளாஸ்டிக் கழிவுகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று அகற்றினர்.

கோவையில் உள்ள குளங்கள் மற்றும்நீர் நிலைகளை பேணிக் காக்கும்பொருட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் வாரந்தோறும் இறுதி நாட்களில் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 72-வது களப்பணி இன்று நடைபெற்றது.
பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த சமூக பணியில் ஈடுபட்டனர்.

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்ற இந்த பணியில் வாலாங்குளத்தில் கொட்டப்பட்டிருந்த நான்கு டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.

கோவையில் உள்ள குளங்கள் மற்றும்நீர் நிலைகளை பேணிக் காக்கும்பொருட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் வாரந்தோறும் இறுதி நாட்களில் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 72-வது களப்பணி இன்று நடைபெற்றது.
பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த சமூக பணியில் ஈடுபட்டனர்.

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்ற இந்த பணியில் வாலாங்குளத்தில் கொட்டப்பட்டிருந்த நான்கு டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.