கோவை: சிறுவாணி நீர் விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, உலகமய பொருளாதார கொள்கையை ஏற்றதில் இருந்து சேவை எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது என்ற குற்றச்சாட்டுடன் பதிலைக் கொடுத்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கோவை: சிறுவாணி நீர் விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, உலகமய பொருளாதார கொள்கையை ஏற்றதில் இருந்து சேவை எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது என்ற குற்றச்சாட்டுடன் பதிலைக் கொடுத்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கோவை விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகமய பொருளாதார கொள்கையை ஏற்றதில் இருந்து சேவை எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது. கோவையில் தண்ணீர் விநியோகம் பிரான்ஸ் நாட்டிற்கு கொடுத்து இருப்பதில் வியப்பு எதுவுமில்லை. அனைத்தும் வியாபாரமாக்கப்பட்டுவிடும்.
ஆனால், இது பேராபத்தை ஏற்படுத்தும். தமிழர்களின் உரிமையைக் காக்க மத்திய அரசு எப்போதும் துணை நின்றதில்லை. இந்தியாவில் இருந்து தமிழகம் தனித்து இருந்தால் உலகில் வல்லரசு நாடாக மாறியிருக்கும் என்று பொருளாதார மேதை அமர்த்திய சென் கூறினார். மாறாக தமிழகத்தை இராணுவ நிலமாக, வளவேட்டை காடாக மாறிப்போய்விட்டது.
இந்த மண்ணையும், நாட்டையும் நேசிக்கக் கூடியவர்கள் ஆட்சியில் இல்லை. எட்டு வழிச்சாலையில் பத்தாயிரம் கோடி திட்டம் என்றால் அதில் இரண்டாயிரம் கோடி கமிஷன் கிடைக்கும் என ஆட்சியாளர்கள் அவர்களுக்கான லாபத்தை மட்டுமே பார்க்கின்றனர்.
ஓசூர், நெய்வேலி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் புதிதாக விமான நிலையம் அமைக்க கட்டாயம் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும். பல்வேறு திட்டங்களால் விளைநிலத்தை பிடுங்கி நிலமற்ற கூலிகளாக தமிழர்கள் மாற்றப்படுகின்றனர். நோக்கமற்ற தலைமைகளிடம் அதிகாரம் இருப்பதே இதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.