டெல்லி: எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வாழ்க்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கோரி தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தக்க செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கோரி தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தக்க செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது.
இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வெளியிட்டது. அவர்கள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை கூறினர். இதனால், இந்த வழக்கில் 3-ஆவது நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார்.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களில் தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து மற்ற 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டால் உரிய நீதி கிடைக்காது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.