கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பசு: பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

கோவை: தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்த பசுவை, கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர்.

கோவை: தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்த பசுவை, கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர். 

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் கிருஷ்ணகுமார் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வழக்கமாக மாடுகளை கட்டிவைத்திருப்பது வழக்கம். 

இந்த நிலையில், நேற்று இரவு பசு ஒன்று தோட்டத்தில் இருந்த 15 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தோட்டத்தின் உரிமையாளர், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வீரர்கள், கயிறு கட்டி பசுவை தூக்க முயன்றனர். 



தொடர்ந்து, சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பசு பத்திரமாக மீட்கப்பட்டது. சிறு காயங்களும் இன்றி பசுவை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...