கோவை: தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்த பசுவை, கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர்.
கோவை: தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்த பசுவை, கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர்.
போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் கிருஷ்ணகுமார் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வழக்கமாக மாடுகளை கட்டிவைத்திருப்பது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று இரவு பசு ஒன்று தோட்டத்தில் இருந்த 15 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தோட்டத்தின் உரிமையாளர், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வீரர்கள், கயிறு கட்டி பசுவை தூக்க முயன்றனர்.

தொடர்ந்து, சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பசு பத்திரமாக மீட்கப்பட்டது. சிறு காயங்களும் இன்றி பசுவை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் கிருஷ்ணகுமார் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வழக்கமாக மாடுகளை கட்டிவைத்திருப்பது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று இரவு பசு ஒன்று தோட்டத்தில் இருந்த 15 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தோட்டத்தின் உரிமையாளர், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வீரர்கள், கயிறு கட்டி பசுவை தூக்க முயன்றனர்.

தொடர்ந்து, சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பசு பத்திரமாக மீட்கப்பட்டது. சிறு காயங்களும் இன்றி பசுவை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.