தூய்மை இந்தியா திட்டம் 2018-க்கான தரவரிசைப்பட்டியலில், கோவை மாநகராட்சி 16-வது இடத்தைப் பிடித்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் 2018-க்கான தரவரிசைப்பட்டியலில், கோவை மாநகராட்சி 16-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் ஜனவரி 4-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டம் 2018-க்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த நகரங்களான திருச்சி மாநகராட்சி (3,351.69) 13-வது இடத்திலும், கோவை மாநகராட்சி (3,291.94) 16-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதேபோல, ஈரோடு 51-வது இடத்திலும், சென்னை 100-வது இடத்திலும், மதுரை மாநகராட்சி 123-வது இடத்திலும், திண்டுக்கல் 124-வது இடத்திலும், புதுக்கோட்டை 167 இடத்திலும், தூத்துக்குடி மாநகராட்சி 171-வது இடத்திலும், திருப்பூர் மாநகராட்சி 172-வது இடத்திலும், திருநெல்வேலி 175-வது இடத்திலும் உள்ளது.
இந்தூர் 3,707 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போபால், சண்டிகர் முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளன.
இந்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் ஜனவரி 4-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டம் 2018-க்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த நகரங்களான திருச்சி மாநகராட்சி (3,351.69) 13-வது இடத்திலும், கோவை மாநகராட்சி (3,291.94) 16-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதேபோல, ஈரோடு 51-வது இடத்திலும், சென்னை 100-வது இடத்திலும், மதுரை மாநகராட்சி 123-வது இடத்திலும், திண்டுக்கல் 124-வது இடத்திலும், புதுக்கோட்டை 167 இடத்திலும், தூத்துக்குடி மாநகராட்சி 171-வது இடத்திலும், திருப்பூர் மாநகராட்சி 172-வது இடத்திலும், திருநெல்வேலி 175-வது இடத்திலும் உள்ளது.
இந்தூர் 3,707 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போபால், சண்டிகர் முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளன.